வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரூ. 9.96 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளை பொருள்கள் ரூ. 9 லட்சத்து 96 ஆயிரத்து 841க்கு திங்கள்கிழமை விற்பனையானது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:43 pm

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளை பொருள்கள் ரூ. 9 லட்சத்து 96 ஆயிரத்து 841க்கு திங்கள்கிழமை விற்பனையானது.
கொடுமுடி சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 18,691 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இதில், தேங்காய் கிலோ அதிகபட்சமாக ரூ. 30.45 க்கும், குறைந்த பட்சமாக ரூ. 24.35 க்கும் ஏலம் போனது. அதேபோல, 193 மூட்டைகளில் கொண்டு வந்த  தேங்காய் கொப்பரை ரூ. 8,17,261க்கு விற்பனையானது. 
இதில், முதல் தரம் அதிகபட்சமாக ரூ. 108.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 102.69 க்கும்,  இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ. 98.09 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 62.19 க்கும் விற்பனை நடைபெற்றது. மொத்தம், ரூ. 9 லட்சத்து 96 ஆயிரத்து 841 க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.