திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் பணிப் புறக்கணிப்பு

இளநிலை வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை

Updated On :13 பிப்ரவரி 2019, 7:44 am IST

இளநிலை வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு பார் கவுன்சில்  சங்கம், வழக்குரைஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து பார் கவுன்சில் சங்கத் தலைவர் சந்திரசேகரன், வழக்குரைஞர்கள்  சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
 வழக்குரைஞர்களுக்கு நீதிமன்றத்தில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும். பெண் வழக்குரைஞர்களுக்கு தனி கட்டடம், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கும் அவர்களது குடும்ப பாதுகாப்புக்கும் அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும். வழக்குரைஞர்களுக்கு  சொந்த வீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சட்ட உதவி மையம், சட்ட ஆலோசனைகளுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்குப் பதிலாக வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேல் நீதிமன்றங்களில் இளநிலை வழக்குரைஞர்களாக இருப்பவர்களுக்கு மாதம்தோறும்  ரூ.10ஆயிரம்  உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  நடைபெற்ற இந்த நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈரோட்டில் 800 வழக்குரைஞர்களும், கோபி, சத்தி, பெருந்துறை, பவானி, கொடுமுடி என மாவட்டத்தில் உள்ளஅனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.