தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தமிழகத்தில் சேவை அறியும்  உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தென்னிந்திய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. 

Updated On :25 பிப்ரவரி 2019, 10:13 am IST

தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தென்னிந்திய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. 
ஈரோட்டில் தென்னிந்திய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மாநில அமைப்பாளர் வீரபத்திரன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் பாபு, புரவலர் கருப்பணன், மாவட்டத் தலைவர் குமரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டம், புதை வட மின் திட்டம் போன்ற திட்டங்களுக்காக குழிகளைத் தோண்டியுள்ளனர். ஆனால் பணிகள் முடிந்த இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் தோண்டிய சாலைகளை சீரமைத்து தார் சாலையாக அமைத்துத் தர வேண்டும்.  தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஈரோட்டில் உள்ள கடைகளில் அதிக அளவில்  விற்பனை செய்யப்படுகின்றன. மாவட்ட  நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில் வழக்குரைஞர்கள் தினகரன், கனகராஜ், ஆனந்தராஜா, ராஜமாணிக்கம், மாவட்டப் பொறுப்பாளர்கள் கண்ணன், ராஜேஷ், மாரியப்பன், காமாட்சிகண்ணன், விஜயகுமார், சுகுமார், நாகராஜ், குப்புசாமி, சின்னாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.