எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

2.5 லட்சம் டன் நெகிழிக் கழிவுகள் அகற்றம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

ஓடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தேங்கியிருந்த 2.5 லட்சம் டன் நெகிழிக் கழிவுகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரே நாளில் அகற்றியது. 

Updated On :25 பிப்ரவரி 2019, 10:12 am IST

ஓடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தேங்கியிருந்த 2.5 லட்சம் டன் நெகிழிக் கழிவுகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரே நாளில் அகற்றியது. 
தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓடைகள், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தேங்கிக் கிடக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நெகிழிக்  கழிவுகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமை வகித்து தொடங்கிவைத்தார். 
உதவி சுற்றுச் சூழல் பொறியாளர்கள் மோகன், செல்வகுமார், உதவிப் பொறியாளர்கள் ராஜ்குமார், ஜோதி வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடையில் இருந்து கிறிஸ்துஜோதி பள்ளி வரையிலும், காலிங்கராயன் வாய்க்காலில் பேபி கால்வாய் பகுதியிலும், மரவாபாளையம் பகுதி, கங்காபுரம் நரிப்பள்ளம் ஓடை, ராசம்பாளையம் பகுதியில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையிலும், முள்ளாம்பரப்பு, பவானி கோயில் ஆகிய பகுதிகளிலும் நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
ஓடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து ஓரே நாளில் மட்டும் இரண்டரை டன் நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் சேகரிக்கப்பட்ட நெகிழிக் கழிவுகள் அனைத்தும் மறுசுழற்சி செய்யும் இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.