மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

2.5 லட்சம் டன் நெகிழிக் கழிவுகள் அகற்றம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

ஓடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தேங்கியிருந்த 2.5 லட்சம் டன் நெகிழிக் கழிவுகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரே நாளில் அகற்றியது. 

Updated On :25 பிப்ரவரி 2019, 10:12 am IST

ஓடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தேங்கியிருந்த 2.5 லட்சம் டன் நெகிழிக் கழிவுகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரே நாளில் அகற்றியது. 
தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓடைகள், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தேங்கிக் கிடக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நெகிழிக்  கழிவுகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமை வகித்து தொடங்கிவைத்தார். 
உதவி சுற்றுச் சூழல் பொறியாளர்கள் மோகன், செல்வகுமார், உதவிப் பொறியாளர்கள் ராஜ்குமார், ஜோதி வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடையில் இருந்து கிறிஸ்துஜோதி பள்ளி வரையிலும், காலிங்கராயன் வாய்க்காலில் பேபி கால்வாய் பகுதியிலும், மரவாபாளையம் பகுதி, கங்காபுரம் நரிப்பள்ளம் ஓடை, ராசம்பாளையம் பகுதியில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையிலும், முள்ளாம்பரப்பு, பவானி கோயில் ஆகிய பகுதிகளிலும் நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
ஓடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து ஓரே நாளில் மட்டும் இரண்டரை டன் நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் சேகரிக்கப்பட்ட நெகிழிக் கழிவுகள் அனைத்தும் மறுசுழற்சி செய்யும் இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.