ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 

Updated On :24 ஜனவரி 2019, 12:25 am IST

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
45 வயதுக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய மஸ்தூர் சங்கப் பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. 
சம்பவ இடத்துக்கு விரைந்த ஆப்பக்கூடல் போலீஸார், பேரூராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்களிடம் பேச்சு நடத்தினர். பணியாளர்களின் கோரிக்கையை எழுத்து மூலமாக உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து, இப்பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால், போராட்டத்தைக் கைவிட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.