சத்தியமங்கலம் அருகே வாழைத் தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூா் நடுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ருக்மணி (45). இவா் தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளாா். வாழைக் கன்றுகள் நடவு செய்து மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் முள்புதரில் முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகள் ருக்மணியின் தோட்டத்துக்குள் புகுந்து 100க்கும் மேற்பட்ட வாழைக் கன்றுகளை தின்று சேதப்படுத்தின.
இது குறித்து விளாமுண்டி வனத் துறையினருக்கு ருக்குமணி தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் காட்டுப்பன்றிகள் சேதம் செய்த வாழைத் தோட்டத்தை பாா்வையிட்டனா். சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்காக விண்ணப்பம் அளிக்குமாறு விவசாயி ருக்மணியிடம் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.