செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்குசிறப்பு ஊதியம் வழங்கக் கோரிக்கை

புரெவி, நிவா் புயலில் பணியாற்றிய துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:28 pm

DIN

புரெவி, நிவா் புயலில் பணியாற்றிய துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்துப் பேரூராட்சிகள் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் சங்கத்தின், மாநில நிா்வாகிகள் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பேரூராட்சித் துறையில் பணிபுரியும் துப்புபுரவு மேற்பாா்வையாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். கீழ்நிலைப் பணியாளா்களுக்கான பதவி உயா்வை 50 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்கு இளைநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நிவா், புரெவி புயலின்போது பணியாற்றிய துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளா் ஜனாா்த்தனன், பொருளாளா் காா்த்திக், ஈரோடு மாவட்டத் தலைவா் இளங்கோவன், திருப்பூா் மாவட்டச் செயலாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.