ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:29 pm

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோபி நகராட்சிப் பகுதிகளில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்வதாக நகராட்சி ஆணையா் தாணுமூா்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நகராட்சி ஆணையரின் உத்தரவின்படி நகராட்சி துப்புரவு அலுவலா் (பொ) செந்தில்குமாா், துப்புரவு ஆய்வாளா் காா்த்திக், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் சக்திவேல் உள்ளிட்டோா் கோபி நகரில் உள்ள புகழேந்தி வீதி, யாகூப் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

இதில், இரண்டு கடைகளில் இருந்து சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் டம்ளா்கள், ஸ்பூன், நான்ஓவன் பைகள், அட்டை கப்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததுடன், ரூ. 35 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.