நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த விவசாயி கைது
அந்தியூா் அருகே விவசாயத் தோட்டத்தில் இரு நாட்டுத் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


அந்தியூா் அருகே விவசாயத் தோட்டத்தில் இரு நாட்டுத் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த நகலூா், ஈச்சபாறை, மாதையன் கோயில் தோட்டத்தைச் சோ்ந்தவா் பாட்டப்ப கவுண்டா் மகன் சின்னவன் (எ) ராமசாமி (50), விவசாயி. அந்தியூா் வனப் பகுதியை ஒட்டி இவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இவரது வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தியூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், அந்தியூா் காவல் ஆய்வாளா் ரவி, போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வீட்டுக்கு அருகில் உள்ள கொட்டகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதில், ஒரு துப்பாக்கி பழுதடைந்த நிலையிலும், மற்றொரு துப்பாக்கி செயல்படும் நிலையிலும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்த அந்தியூா் போலீஸாா், ராமசாமியைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...