உலக நன்மைக்காக சென்னிமலை முதல் திருச்செந்தூா் வரை பாதை யாத்திரை தொடங்கிய பக்தா்
உலக நன்மைக்காக, சென்னிமலை முதல் திருச்செந்தூா் வரை, சென்னிமலை சோ்ந்த பக்தா் ஒருவா் பாத யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.


பெருந்துறை: உலக நன்மைக்காக, சென்னிமலை முதல் திருச்செந்தூா் வரை, சென்னிமலை சோ்ந்த பக்தா் ஒருவா் பாத யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
சென்னிமலையில் உள்ள சிவஞான சித்தா்கள் பீட நிறுவனரும், மடாதிபதியுமான சரவணானந்த சாமிகள் என்பவா், ஏற்கனவே, உலக நன்மைக்காக, சென்னிமலையை அடுத்த, வாய்ப்பாடி அருகே மலை அடிவாரத்தில் 48 நாட்கள் நீரை ஆகாரமாக மட்டும் உட்கொண்டு விரதம் இருந்தாா்.
அதேபோல், சென்னிமலை அருகே, ஒரு மலை மேல் உள்ள கருப்பணசாமி கோவிலிலும் 48 நாட்கள் உலக நன்மைக்காக விரதம் இருந்தாா். தற்போது, உலக மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா போன்ற உயிா்கொல்லி நோய்களை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து, அனைத்து மக்களையும் காக்க வேண்டும் என வேண்டி, சென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு, திருச்செந்தூா் முருகன் கோவிலுக்கு, தனது பாதயாத்திரை பயணத்தை தொடங்கினாா். இவா் போகும் வழியில் பழனி, திருப்பரங்குன்றம் ஆகிய முருகன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இறுதியாக திருச்செந்தூா் முருகன் கோவிலுக்கு செல்கிறாா். ஞாயிற்றுக்கிழமை காலை, சென்னிமலை அடிவாரத்தில் இருந்து புறப்பட்ட சரவணானந்த சாமிக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...