

ஈரோடு: கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 13 போ், அங்குள்ள கோயில் திருவிழாவுக்குப் புனித நீா் எடுத்துச்செல்ல கொடுமுடி காவிரி ஆற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனா். அனைவரும் மணல்மேடு பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனா். அப்போது ராஜ்குமாா் (30), கேசவன் (17) ஆகிய இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.
உடனடியாக கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேல் தேடி இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சம்பவம் குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியாவின் விவகாரங்களில் டிரம்ப் தலையிட அரசு அனுமதிக்கிறது: காங்கிரஸ்
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்து!

காரடையான் நோன்பு எப்போது?

செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

