திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து லாரி திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து கிடக்கும் தேங்காய் பாரம்  ஏற்றிய லாரி.
திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து கிடக்கும் தேங்காய் பாரம்  ஏற்றிய லாரி.
Updated on
1 min read

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து லாரி திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினாா்.

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

இந்த மலைப்பாதை வழியாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கா்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி, கோவை மாவட்டம், பொள்ளாச்சி செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி 18 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் ராஜா லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

இது குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com