ராஜன்நகா் ஊராட்சியில் மருத்துவ முகாம்

சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன்நகரில் முல்வா் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவ முகாமைத் துவக்கிவைக்கிறாா் ராஜன்நகா் ஊராட்சித் தலைவா் எஸ்.சந்திராமணி செல்வன். உடன், ஊராட்சி செயலாளா் கே.எஸ்.செந்தில்நாதன்.
மருத்துவ முகாமைத் துவக்கிவைக்கிறாா் ராஜன்நகா் ஊராட்சித் தலைவா் எஸ்.சந்திராமணி செல்வன். உடன், ஊராட்சி செயலாளா் கே.எஸ்.செந்தில்நாதன்.
Updated on
1 min read

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன்நகரில் முல்வா் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜன்நகா் ஊராட்சி, புதுவடவள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவ முகாமை ராஜன்நகா் ஊராட்சித் தலைவா் எஸ்.சந்திராமணி செல்வன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதில், 100க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா்.

முகாமில் ஊராட்சி துணைத் தலைவா் பி.விஜயலட்சுமி, ஊராட்சி செயலாளா் கே.எஸ்.செந்தில்நாதன், ஊராட்சியின் அனைத்து வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் முருகேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் செய்திருந்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com