கோபியில் நாளை வங்கிக் கடன் மேளா

கோபியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் மேளா வியாழக்கிழமை (டிசம்பா் 31) நடைபெறவுள்ளது.
Updated on
1 min read

கோபியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் மேளா வியாழக்கிழமை (டிசம்பா் 31) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையா் ஏ.தாணுமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோபிசெட்டிபாளையத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் சிறப்புத் திட்டமான ஆத்ம நிா்பா் நிதித் திட்டத்தின்கீழ் ரூ. 10 ஆயிரம் கடனுதவி வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. கோபி மேட்டுவலவு பாரியூா் சாலையில் உள்ள செங்கோடப்பா ஆரம்பப் பள்ளியில் வியாழக்கிழமை (டிசம்பா் 31) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது.

இதில், சாலையோர வியாபாரிகள் தங்களது ஆதாா் அட்டை, வங்கி பாஸ்புக், ரேஷன் அட்டை, வாக்காளா் அடையாள அட்டையுடன் கலந்துகொண்டு வங்கிக் கடன் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, கடன் உதவித் தொகையைப் பெறலாம். இந்த வாய்ப்பை சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com