கொங்கு ஐ.டி.ஐ.யில் வேலைவாய்ப்பு முகாம்

பெருந்துறை கொங்கு ஐ.டி.ஐ., சென்னை டி.பி.ஐ. நிறுவனம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
கொங்கு ஐ.டி.ஐ.யில் வேலைவாய்ப்பு முகாம்
Updated on
1 min read

பெருந்துறை கொங்கு ஐ.டி.ஐ., சென்னை டி.பி.ஐ. நிறுவனம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமிற்கு, கொங்கு ஐ.டி.ஐ. கல்லூரித் தாளாளா் மாலதி இளங்கோ தலைமை வகித்தாா். கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் வேதகிரி ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். கொங்கு ஐ.டி.ஐ. முதல்வா் என்.தினேஷ்குமாா் வரவேற்றாா்.

முகாமில், டிபிஐ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலா் எம்.அன்சாரி, துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா். தமிழ்நாடு, ஆந்திரம், உத்தரப்பிரதேசம் போன்ற பிற மாநிலங்களில் இருந்து சுமாா் 150 மாணவா்கள் வருகை தந்திருந்தனா். இதில், 78 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு, கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.கே.முத்துசாமி, செயலாளா் பி.சி.பழனிசாமி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், கல்லூரித் தாளாளா் மாலதி இளங்கோ ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் கோமதிசங்கா், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com