சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கவுந்தப்பாடியில் கரோனா பாதிப்பு எதிரொலி: 45 வீடுகளுக்கு சீல் வைத்து சுகாதாரத்துறையினர் பரிசோதனை

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் விரைவு உணவகத் தொழிலாளி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து

News image
Updated On :23 மே 2020, 1:01 pm

DIN

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் விரைவு உணவகத் தொழிலாளி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வசித்த தெருவில் உள்ள 45 வீடுகளைச் சீல் வைத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கவுந்தப்பாடி, திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த 52 வயதான விரைவு உணவகத் தொழிலாளிக்கு கடந்த 15-ம் தேதி ஏற்பட்ட விபத்தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவர், கவுந்தப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின், கோபியை அடுத்த சிங்கிரிபாளையத்தில் நாட்டு வைத்தியத்தில் எண்ணெய் கட்டு போட்டுள்ளார்.

இதற்காக, வாடகைக் காரில் சென்று வந்துள்ளார். காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு குணமடையாததால் கோபியில் உள்ள எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து, கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையிலும், ஈரோடு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். எலும்புமுறிவால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய அறுவை சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் 20-ம் தேதி சேர்க்கப்பட்டார்.

அங்கு, மருத்துவர்கள் கரோனா பரிசோதனை செய்தபோது கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததும், எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனைக்கு நோயாளியுடன் இவரது மனைவி, இரு மகன்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கவுந்தப்பாடியில் இவருடன் தொடர்பில் இருந்த 35-க்கும் மேற்பட்டோருக்கு 3 மருத்துவர்கள், 16 சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் கொண்ட குழுவினர் சனிக்கிழமை கரோனா பரிசோதனை செய்தனர்.

மேலும், திருவள்ளுவர் வீதியில் உள்ள 45 வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டு, குடியிருப்போர் விவரம் சேகரிக்கப்பட்டதோடு, அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வாடகைக் கார் ஓட்டுநர், தனியார் மருத்துவமனை பணியாளர்களும் சுகாதாரப் பணியாளர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். திருவள்ளுவர் தெரு முழுவதும் மூடப்பட்டு, சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

மேலும், தெருவில் வசித்து வரும் அனைவருக்கும் வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.