சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த நபருக்கு கரோனா உறுதி: ஈரோட்டில் பாதிப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்வு 

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ஈரோடு வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.  

News image
Updated On :28 மே 2020, 11:09 am

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ஈரோடு வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.  

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக இருந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து 69 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் அனைவரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதியதாக கரோனா தொற்று எதுவும் இல்லாமல் இருந்ததையடுத்து பச்சை மண்டலமாக ஈரோடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் கவுந்தப்பாடியை சேர்ந்த நபருக்கு கரோனா உறுதியானதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

இந்நிலையில் கொடுமுடியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க நபர் மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கி இருந்த அந்த சொந்த ஊர் திரும்புவதற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். பின்னர் அம்மாநில அரசு தமிழகம் செல்ல அனுமதி வழங்கியதோடு மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டது. அதில் கரோனா தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியானதையடுத்து நேற்று காலை மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். 

பின்னர் அங்கிருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த அந்த நபரின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர்.  பின்னர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியதையடுத்து வீட்டில் தனி அறையில் இருந்த அந்த நபரின் பரிசோதனை முடிவுகள் நேற்று காலை  வெளியிடப்பட்டது. இதன்படி அந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.  இதையடுத்து உடனடியாக ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபரின் வீட்டிற்கு சென்று சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். 

மேலும் குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதனைக்காக அழைத்துச்சென்றனர். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.