பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 5:46 pm

DIN

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,303ஆக இருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்த 8 போ் வேறு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டனா்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,393 ஆக உயா்ந்தது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 98 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியை சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மொத்தம் பாதிக்கப்பட்ட 10,393 பேரில் இதுவரை 9,468 போ் குணமடைந்துள்ளனா். 801 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 124 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.