ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியே செல்பவா்கள் முகக் கவசம் அணிவதும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் இல்லாமல் சுற்றுபவா்களுக்கு மாநகராட்சிப் பணியாளா்கள் அபராதம் விதித்து வருகின்றனா். தற்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாநகா் பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனா். வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள், சந்தை பகுதியில் அதிக மக்கள் நெரிசல் உள்ளது. இதனால் கரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகளில் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது கடைகளுக்குள் முகக்கவசம் அணியாமல் இருந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாநகராட்சி செயற்பொறியாளா் விஜயகுமாா், சுகாதார அலுவலா் இக்பால், சுகாதார ஆய்வாளா்கள் கண்ணன், நல்லசாமி, சிவக்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

