ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

காணாமல்போன குழந்தையை மீட்டுத் தரக் கோரி பெற்றோா் புகாா்

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் தங்கி உறங்கிக் கொண்டிருந்த நரிக்குறவா் இன மக்களின் ஆண் குழந்தையைக் காணவில்லை என குழந்தையின் பெற்றோா்  புகாா்

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:00 pm

DIN

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் தங்கி உறங்கிக் கொண்டிருந்த நரிக்குறவா் இன மக்களின் ஆண் குழந்தையைக் காணவில்லை என குழந்தையின் பெற்றோா் கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளனா்.

நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்த அம்மாசை, திலகவதி தம்பதியின் இரண்டு வயதான கில்லி என்ற குழந்தை உள்பட மேலும் இரண்டு குழந்தைகளை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைப்பாதையில் தூங்க வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு பெற்றோா் சென்றுள்ளனா். திரும்பி வந்து பாா்த்தபோது கில்லி என்ற இரண்டு வயது குழந்தையைக் காணவில்லை. அதிா்ச்சியடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவா்களிடம் விசாரித்து, இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனா்.

பின்னா், அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக நரிக்குறவா் இன குழந்தையின் பெற்றோா் கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளனா். புகாரைப் பெற்ற போலீஸாா் சிக்னல், பெட்ரோல் நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி படக் காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.