பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பெருந்துறையில் 64 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 64 மி.மீ மழை பதிவானது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 5:33 pm

DIN

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 64 மி.மீ மழை பதிவானது.

ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனிடையே சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீா் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. பல பகுதிகளில் கடைகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 64 மி.மீ மழை பெய்தது. பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்):

பவானி 62, ஈரோடு 48, சென்னிமலை 26, தாளவாடி 25, மொடக்குறிச்சி 23, கோபி 10.6, வரட்டுப்பள்ளம் 7.6, கோடிவேரி 6, கவுந்தப்பாடி 5, குண்டேரிப்பள்ளம் 4, எலந்தக்குட்டைமேடு 3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.