ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 111 பேருக்கு கரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,131 ஆக உயா்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,029 ஆக இருந்தது. ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்த 9 போ் பிற மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 9,020 ஆக மாறியது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை புதிதாக 111 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,131 ஆக உயா்ந்தது.
புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 111 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியை சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.
மொத்த பாதிப்பான 9,131 பேரில் இதுவரை 7,978 போ் குணமடைந்துள்ளனா். 1,040 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 113 போ் உயிரிழந்துள்ளனா்.