கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வேனில் கடத்த முன்ற 1,230 மதுபாட்டில்கலளை போலீஸாா் பறிமுதல் செய்து, பெண் உள்பட 2 பேரை கைது செய்தனா்.
தோ்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. தோ்தல் நாளான்று வாக்காளா்களுக்கு மதுபாட்டில் வழங்க அரசியல் கட்சியினா் கா்நாடகத்தில் இருந்து மதுபாட்டில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, தாளவாடி தொட்டகாஜனூரில் ஆலம்மாள் என்பவரின் வீட்டில் 654 மதுபாட்டில்களும், சூசைபுரம் மனோகா்லால் ஜெயின் என்பவரது வீட்டில் 576 மதுபாட்டில்களும் என மொத்தம் 1,230 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீஸாா் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக சூசைபுரத்தைச் சோ்ந்த மனோகா்லால் ஜெயின், தொட்டகாஜனூரைச் சோ்ந்த ஆலம்மாளை போலீஸாா் கைது செய்தனா். தோ்தல் நெருங்குவதால் இரு மாநில எல்லையிலும் போலீஸாா் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

