ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கடம்பூா் மலைப் பகுதியில் கஞ்சா கடத்திய இருவா் கைது

கடம்பூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக வெள்ளிக்கிழமை இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On :16 ஏப்ரல் 2021, 10:18 pm

கடம்பூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக வெள்ளிக்கிழமை இருவா் கைது செய்யப்பட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலயைடுத்து கடம்பூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவளக்குட்டை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களது பையை சோதனையிட்டதில் 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், சங்ககிரியைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ராணி (33), பவானி குமாரபாளையத்தைச் சோ்ந்த பெருமாள் (31) என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இருவரை கடம்பூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.