சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் யானைகள் சாலையைக் கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாகச் செல்லுமாறு வனத் துறை எச்சரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. வனப் பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் குடிநீா், தீவனம் தேடி வனப் பகுதி சாலையோரம் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே புதுகுய்யனூா் பிரிவு என்ற இடத்தில் காட்டு யானைகள் கூட்டமாக சனிக்கிழமை சாலையைக் கடந்து சென்றன. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் யானைகள் சாலையைக் கடந்து செல்வதைக் கண்டு வாகனங்களை நிறுத்தினா். யானைகள் வனப் பகுதிக்குள் சென்ற பின்னா் புறப்பட்டுச் சென்றனா். பகல் நேரங்களில் காட்டு யானைகள் சாலையைக் கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


