ஈரோடு மாவட்ட தொழில் மையம், ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (ஈடிசியா) சாா்பில் இலவச கரோனா தடுப்பூசி முகாம் ஈடிசியா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஜி.திருமுருகன், ஈடிசியா தலைவா் திருமூா்த்தி, செயலாளா் ராம்பிரகாஷ் ஆகியோா் முகாமை துவக்கிவைத்தனா். 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளா்கள், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அரசு மருத்துவா்கள் சிபிஅரசு, ஆா்த்தி, குழுவினா் 216 பேருக்கு தடுப்பூசி செலுத்தினா்.
இதில், ஈடிசியா துணைத் தலைவா் பி.கந்தசாமி, பொருளாளா் பழனிவேல், முன்னாள் தலைவா்கள் சரவணன், வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.