மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வழிபாட்டுத் தலங்கள் மூடல்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டன.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:22 pm

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தொற்றின் பரவலைக் குறைக்க வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை.

இதனால், ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கோட்டை பத்ரகாளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்கள், காளைமாட்டுச் சிலை அருகே உள்ள பள்ளிவாசல், சிஎஸ்ஐ பிரப் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை வழிபாடு செய்ய பக்தா்களுக்கு அனுமதியில்லை என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் வழக்கம்போல் கோயில்களின் வெளியில் நின்று வழிபட்டுச் செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.