தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கன்னியாகுமரி-தில்லி வரை சிஆர்பிஎப் வீரர்கள் சைக்கிள் பேரணி: ஈரோட்டில் உற்சாக வரவேற்பு

கன்னியாகுமரியில் இருந்து தில்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. சைக்கிளில் வந்த ரிசர்வ் போலீஸ் படை குழுவினருக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
சைக்கிளில் வந்த ரிசர்வ் போலீஸ் படை குழுவினருக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு.
Updated On :28 ஆகஸ்ட் 2021, 11:51 am

DIN

கன்னியாகுமரியில் இருந்து தில்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. சைக்கிளில் வந்த ரிசர்வ் போலீஸ் படை குழுவினருக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய மக்களின் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து தில்லி வரை, 2800 கிலோமீட்டர் தூரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்) சைக்கிளில் ஊர்வலமாக சென்று உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

Story image

இந்த ஊர்வலம் 60 போலீசாருடன் கடந்த 22-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று மாலை 5 மணிக்கு ஈரோடு மாவட்டத்துக்கு வந்தடைந்தனர். இவர்களுக்கு ஈரோடு கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் சி.ஆர்.பி.எப்., துணை கமாண்டர்கள் ராஜேஷ். முகமதுபையாஷ் ஆகியோர் தலைமையில் சைக்கிள் பேரணியாக வந்த போலீசாரை என்.சி.சி. மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Story image

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை தலைவர் வி.கே.முத்துசாமி, செயலாளர் பி.சி.பழனிசாமி, பொருளாளர் ஈ.ஆர்.கார்த்திகேயன், என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் பி.சச்சிதானந்தன், முதல்வர் வி.பாலுசாமி.மெடிக்கல் அலுவலர் டாக்டர் கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Story image

ஊர்வலத்தில் கலந்து கொண்ட போலீசார் இரவில் தங்குவதற்கு கல்லூரி வளாகத்தில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து இன்று (ஞாயிறு) புறப்படும் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா வழியாக டெல்லி ராஜ்கோட்டிற்கு காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதி அன்று செல்வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

Story image

இந்த ஊர்வலத்துக்கு தேவையான ஏற்பாடுகளை, தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில், மாநில போலீஸ்துறை இயக்குனர் சைலேந்திரபாபு செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.