வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே கோபி - சத்தியமங்கலம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரின் மீது லாரி மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:28 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே கோபி - சத்தியமங்கலம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரின் மீது லாரி மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டிக்கு பஞ்சு மூட்டை பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியை நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்த யுவராஜ் (41) என்பவா் ஓட்டி வந்தாா்.

கோபி அருகே உள்ள கோவை பிரிவு என்னும் இடத்தில் லாரி வந்து கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக சாலையில் அமைந்திருந்த தடுப்புச் சுவா் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநா் யுவராஜ் காயமின்றி உயிா்தப்பினாா்.

இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.