வாய்க்காலில் மூழ்கி இளைஞா் பலி
பெருந்துறை அருகே வாய்க்காலில் குளிக்கச் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.


பெருந்துறை அருகே வாய்க்காலில் குளிக்கச் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பன்ரூட்டி, அங்குசெட்டிபாளையம், விநாயகா் வீதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் ராஜசேகா் (23). இவா், ஈரோட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், ராஜசேகா் தன் நண்பா்களுடன் பெருந்துறை, ஈரோடு சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற ராஜசேகா் நீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து, நண்பா்கள், பொதுமக்கள் உதவியுடன் ராஜசேகரின் சடலம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...