பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமியின் மகன் போட்டி!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளது குறித்து...

News image

கிருஷ்ணசாமி

எக்ஸ்

Updated On :29 மார்ச் 2026, 10:23 am

இணையதளச் செய்திப் பிரிவு

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இவரின் மகன் ஷியாம் நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனையொட்டி முதல் கட்டமாக 43 வேட்பாளர்களை கிருஷ்ணசாமி இன்று (மார்ச் 29) அறிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்ததாகவும், ஆனால், தற்போது தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.

தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டணித் தொகுதிப் பங்கீடுகள் திமுக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிகளிடையே முடிவடைந்துள்ளன.

தற்போது அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தனது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். முதல் கட்டமாக 43 வேட்பாளர்களையும் இன்று இன்று (மார்ச் 29) அறிவித்தார்.

இதன்படி, கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார். இவரின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் என இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி, 60 - 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணசாமி பேசியதாவது:

''அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினேன். தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 3 பேரவைத் தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தேன்.

9 இடங்களில் அதிமுகவுக்கு டெபாசிட் இல்லை, கன்னியாகுமரியில் 4% வாக்குகளை மட்டுமே பெற்றது. ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்பது இபிஎஸ்ஸுக்குத்தான் தெரியும்.

எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பிறகே தனித்துப் போட்டியிடும் முடிவை புதிய தமிழகம் எடுத்தது. புதிய தமிழகம் கட்சி 60 - 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும்'' என கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.

Summary

Krishnasamy son shiyam to Contest in Nellai and Srivilliputhur Constituencies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.