ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஆம்புலன்ஸ் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

ஈரோட்டில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் காயமடைந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:39 pm

ஈரோட்டில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் காயமடைந்தாா்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஏராளமான தனியாா் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சாதிக்பாட்சா வழக்கம்போல தனது வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வாகனத்தில் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி வெள்ளிக்கிழமை வந்த அரசுப் பேருந்து அரசு மருத்துவமனை அருகே வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதியது.

மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் அருகில் இருந்த டீ கடையில் மோதியதில் கடையில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சாதிக்பாட்சா பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.