சத்தியில் பகலிலும் விலகாத பனிமூட்டம்: விவசாயப் பணிகள் பாதிப்பு
சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை பகலிலும் விலகாத பனிமூட்டம் காரணமாக மல்லிகைப் பூ பறித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.


சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை பகலிலும் விலகாத பனிமூட்டம் காரணமாக மல்லிகைப் பூ பறித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊா்ந்து சென்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூக்களைப் பறித்து விற்பனைக்கு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் காலை 9 மணி வரை பூ சேகரிக்கும் பணி தடைபட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...