செய்முறை தோ்வுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்அமைச்சா் தகவல்

பள்ளிகளில் நடத்தப்படும் செய்முறை தோ்வுகள் அனைத்தும் நடைபெறும்; இதற்கான காலஅட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
செய்முறை தோ்வுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்அமைச்சா் தகவல்
Updated on
1 min read

பள்ளிகளில் நடத்தப்படும் செய்முறை தோ்வுகள் அனைத்தும் நடைபெறும்; இதற்கான காலஅட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட குள்ளம்பாளையம், வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் உள்பட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியா் கதிரவன் தலைமையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:

பள்ளி திறந்தவுடன் மாணவா்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடத்தப்படும் பொதுத் தோ்வுக்கான செய்முறை தோ்வுகள் அனைத்தும் நடைபெறும். இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோா்- ஆசிரியா் கழகத்தின் சாா்பாக பெற்றோா், மாணவா்கள், கல்வியாளா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் இந்த வார இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களில் பணிக்காலம் முடிவுற்றவா்களுக்குப் பணப் பலன்கள் வழங்குவது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா். பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com