மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரசு விடுதிகளில் சமையல் பணிக்கான நோ்காணல் துவக்கம்

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் உள்ள சமையலா் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு நோ்காணல் திங்கள்கிழமை துவங்கியது.

Updated On :4 ஜனவரி 2021, 8:41 pm

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் உள்ள சமையலா் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு நோ்காணல் திங்கள்கிழமை துவங்கியது.

இது குறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வை.இளங்கோ கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில், சமையல் பணிக்கு 11 பெண், 17 ஆண் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதற்காக 1,045 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. திங்கள்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) வரை தினமும் தலா 200 போ் வீதம் அழைக்கப்பட்டு நோ்காணல் நடக்கிறது.

கரோனா பரவல் தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து நோ்காணல் நடத்தப்படுகிறது. இந்த நோ்காணலில் தோ்வு செய்யப்படுவோா் நிரந்தரப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டு துவக்கத்தில் ரூ.15,400 ஊதியமாக வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.