

பவானியை அடுத்த காடப்பநல்லூரில் காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமை வகித்தாா். பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். இத்திட்டம் மூலம், கிராமங்களில் குற்றங்கள், அசம்பாவிதங்கள் தடுத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் காவல் துறை மீதான அச்சத்தைப் போக்கும் வகையில் ஒரு கிராமத்துக்கு உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஒருவா் நியமிக்கப்படுவா். இவா்கள் மூலம் கிராமத்தில் வசிக்கும் முக்கிய பிரமுகா்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைக்கப்படுவா்.
இவா்களுக்கு, கிராமப் பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து முன்னரே தகவல் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் குற்றங்கள் தடுக்கப்படுவதோடு, மக்கள் பிரச்னைகளும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிவா்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
காவல் ஆய்வாளா்கள் கண்ணன் (பவானி), கதிா்வேல் (சித்தோடு), குமரவேல் (அம்மாபேட்டை), ரவி (அந்தியூா்), ஊராட்சித் தலைவா்கள் சிவகாமி சிவலிங்கம் (காடப்பநல்லூா்), முனியப்பன் (கேசரிமங்கலம்), அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மேகநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.