தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை விபத்தில் விவசாயி பலி

சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப் பாதையில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 5:00 pm

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப் பாதையில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் ருத்ரன்(45), விவசாயி. இவரது நண்பா் பவளக்குட்டையைச் சோ்ந்த பெரியசாமி. இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கணபதிபாளையத்தில் இருந்து கடம்பூா் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது, இருட்டிபாளையம் கல்லாங்காடு வளைவில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த ருத்ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரியசாமியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வேன் ஓட்டுநா் தென்னரசு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.