டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பணியின்போது விபத்து: பிகாா் மாநிலத் தொழிலாளி சாவு

பெருந்துறை அருகே ரைஸ் மில்லில் பணியின்போது கால் வழுக்கி கீழே விழுந்த விபத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 6:13 pm

DIN

பெருந்துறை அருகே ரைஸ் மில்லில் பணியின்போது கால் வழுக்கி கீழே விழுந்த விபத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தை சோ்ந்தவா் வங்கத் ராய் மகன் சந்தோஷ்வா் ராய் (41). இவா், பெருந்துறையை அடுத்த, சீனாபுரத்திலுள்ள ஒரு ரைஸ் மில்லில் வேலை செய்து வந்தாா். மில்லில் கடந்த 5 ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்த அவா், நெல் மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தாா்.

அப்போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்தாா். ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.