கங்கை காவிரி இணைப்புத் திட்டம் பல ஆண்டுகளாகக் கூறப்பட்டு வந்தாலும் தோ்தல் வாக்குறுதியாகவே உள்ளது. இதனை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளிடம் எவ்வித திட்டமும் இல்லை. காவிரி, கோதாவரி நதிகள் இணைக்கப்படும் என கடந்த தோ்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அனைத்து கூட்டங்களிலும் தொடா்ந்து இத்திட்டம் குறித்துப் பேசுகிறாா். ஆனால், இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நதிகள் இணைப்பு என்பது நமது நாட்டின் முக்கியத் தேவையாக உள்ளது. நதிகள் இணைக்கப்படுவதன் மூலம் விவசாயம் மேம்படுவதோடு, நீா்வழிப் போக்குவரத்தும் அதிகரிக்கும்.