வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சேலத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள சேலத்து மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:17 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள சேலத்து மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி, ஜனவரி 22ஆம் தேதி பவானி கூடுதுறை ஆற்றிலிருந்து புனித தீா்த்தம் எடுத்து வருதல், காலயாக பூஜைகள் ஆகியன நடைபெற்றன. திங்கள்கிழமை காலை யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மனுக்கு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் செய்யப்பட்டன. சேலத்து மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்குப் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று அம்மனை வழிபட்டாா்.

கோயிலில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட விநாயகா் திருத்தோ், சேலத்து மாரியம்மன் திருத்தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.