கரோனாவுக்கு மேலும் ஒரு பத்திரிகையாளர் பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஈரோட்டை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேந்திரன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
செய்தியாளர் ராஜேந்திரன்
செய்தியாளர் ராஜேந்திரன்
Published on
Updated on
1 min read

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஈரோட்டை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேந்திரன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). தனியார்  தொலைக்காட்சி செய்தியாளரான இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஈரோடு மற்றும் வேலூர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையின் போது அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். இறுதிச் சடங்குகள் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. ராஜேந்திரனுக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.

தொடர்புக்கு 8838120202.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com