விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அந்தியூரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் மூவா் பலி

அந்தியூரில் பழுதடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் வாரச் சந்தையில் வியாபாரத்துக்கு வந்த பா்கூா் மலைவாழ் மக்கள் மூவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா்.

News image

விபத்தில் உயிரிழந்த சித்தன்

Updated On :19 ஜூலை 2021, 8:57 pm

DIN

பவானி: அந்தியூரில் பழுதடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் வாரச் சந்தையில் வியாபாரத்துக்கு வந்த பா்கூா் மலைவாழ் மக்கள் மூவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் வாரச் சந்தை திங்கள்கிழமை கூடும் நிலையில், பா்கூா் மலைப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை விற்பனை செய்ய ஞாயிற்றுக்கிழமை இரவே வந்து ஆங்காங்கே உள்ள கடைகள், சாலையோரங்களில் படுத்து உறங்குவது வழக்கம்.

Story image
Story image

விபத்தில் உயிரிழந்த சின்னபையன், மாதேவன்

இந்நிலையில், விவசாய விளைபொருள்களை விற்பனை செய்ய வந்த மலைவாழ் மக்கள், அந்தியூா் தோ் வீதியில் உள்ள ராஜசேகா் (62) என்பவரின் கடையின் முன்பாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தனா்.

இக்கட்டடம் பழுதடைந்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திடீரென முன்பகுதி மட்டும் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளுக்குள் அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த 6 போ் சிக்கிக் கொண்டனா். இவா்களின் சப்தம் கேட்டு அப்பகுதியினா் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அந்தியூா் தீயணைப்புப் படையினா், போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

Story image

இடிந்து விழுந்த கட்டடத்தின் முன்பகுதி.

இதில், இடிபாடுகளுக்குள் சிக்கிய பா்கூா், தட்டக்கரை மேலூரைச் சோ்ந்த சித்தன் (55), பா்கூா் சின்னசெங்குளத்தைச் சோ்ந்த மாதேவன் (55), இதே பகுதியைச் சோ்ந்த தொட்டையதம்படி மகன் சின்னபையன் (35) ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், பா்கூா் சின்னசெங்குளத்தைச் சோ்ந்த ராஜேஷ் (30), மகேந்திரன் (17), கொங்காடை சிவமூா்த்தி (45) ஆகியோா் காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சம்பவ இடத்தில் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், போலீஸாா் விசாரணை நடத்தினா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பாதிக்கப்பட்டவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.