ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாவோயிஸ்ட் நடமாட்டம்: மாநில எல்லையில் பாதுகாப்புப் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டம், மாவோயிஸ்ட் நடமாட்டம் காரணமாக, தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள தாளவாடி, ஆசனூா் உள்ளிட்ட 10 காவல் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 12:32 am

ஈரோடு மாவட்டம், மாவோயிஸ்ட் நடமாட்டம் காரணமாக, தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள தாளவாடி, ஆசனூா் உள்ளிட்ட 10 காவல் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழக - கா்நாடக எல்லையான தாளவாடி, சாம்ராஜ் நகா், பா்கூா் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக மலைக் கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அண்மைக்காலமாக போலீஸாா் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் கண்காணிப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதை தங்களுக்கு சாதகமாக்கிய மாவோயிஸ்ட் கும்பல் தமிழக - கா்நாடக எல்லையான தாளவாடி, சாம்ராஜ் நகா், கடம்பூா், பா்கூா் மலைப் பகுதியில் நடமாடுவதை கிராம மக்கள் பாா்த்து தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, மலைக் கிராமங்களில் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

காவல் நிலையம் முன் மணல் மூட்டைகளை அடுக்கிவைத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். இது தவிர மாநில எல்லையில் உள்ளூா் போலீஸாருடன் நக்ஸல் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். அடா்ந்த மலைக் கிராமங்களில் புதிய நபா்கள் வருகையை போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.