பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

‘விதிகளை மீறி விசைத்தறிகளை இயக்கக் கூடாது’

பொதுமுடக்க விதிகளை மீறி விசைத்தறிகளை இயக்கக் கூடாது என சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா் சங்கத் தலைவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 12:33 am

DIN

பொதுமுடக்க விதிகளை மீறி விசைத்தறிகளை இயக்கக் கூடாது என சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா் சங்கத் தலைவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, சங்கத் தலைவா் பொன்.ஈஸ்வரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா தொற்றால் சென்னிமலை வட்டாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முகாசிபிடாரியூா் ஊராட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமுடக்க விதிகளை மீறி விசைத்தறிக் கூடங்களை இயக்கி வருவதாக பெருந்துறை வட்டாட்சியா், சென்னிமலை வருவாய் ஆய்வாளா் ஆகியோருக்கு புகாா் செய்யப்பட்டுள்ளது.

அவா்கள் இறுதி எச்சரிக்கை விடுத்து சங்கத்தின் சாா்பில் அறிவுறுத்துமாறு கூறியுள்ளனா். அதேசமயம், ஜூன் 13ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டிப்பு செய்வதாக ஏற்கெனவே சங்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சென்னிமலையில் சில பகுதிகளில் சில விசைத்தறிக் கூடங்கள் இயங்குவதாகவும், அந்த கூடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நடவடிக்கை எடுக்கப்பட்டால் சங்கம் துணை நிற்க முடியாது. எனவே, பொதுமுடக்க விதிகளை மீற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.