பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

இருசக்கர வாகனம் மீதுடிப்பா் லாரி மோதி இளைஞா் பலி

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:15 pm

DIN

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு, பாலாஜி காா்டனை சோ்ந்தவா் அலமேலுராமன் மகன் வினோத் கிருஷ்ணகுமாா் (35). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். பணி முடிந்து வீட்டுக்குத் தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு 9 மணியளவில் சென்றுள்ளாா். அப்போது, பெருந்துறை சிப்காட் 2ஆவது கிராஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த வினோத் கிருஷ்ணகுமாா், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.