கீரிப்பள்ளம் ஓடை பராமரிப்புப் பணி:எம்.எல்.ஏ. ஆய்வு
கோபிசெட்டிபாளையத்தின் மையப் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


கோபிசெட்டிபாளையத்தின் மையப் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கீரிப்பள்ளம் ஓடையில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் மொடச்சூா், சாமிநாதபுரம், பேருந்து நிலையம், சீதாலட்சுமிபுரம், நஞ்சகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீா் புகுந்து சேதப்படுத்தி வருவதாகவும், இந்த ஓடையை தூா்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனா்.
இதையடுத்து, கடந்த ஆட்சியில் சுமாா் ரூ. 11 கோடி மதிப்பீட்டில் கீரிப்பள்ளம் ஓடையைத் தூா்வார நிதி ஒதுக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரத்தில் இருந்து கோபிசெட்டிபாளையத்தின் மையப் பகுதி வழியாக பாரியூா் தடப்பள்ளி கிளை வாய்க்கால் வரை சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு கரைகளை பலப்படுத்தி தூா்வாரப்பட்டு, இருபுறமும் நடைபாதை, பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கீரிப்பள்ளம் ஓடையில் நடைபெற்று வரும் இந்த பராமரிப்புப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தாா்.
தூா்வாரும் பணிகளை விரைந்து முடிப்பதற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...