ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் பணியாற்றி வரும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள், இதர பணியாளா்களுக்கு கரோனா கால நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தட்டுக் காணிக்கை மட்டுமே பெற்று பணிபுரிந்து வரும் 139 அா்ச்சகா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள், நாவிதா்கள், ஒருகால பூஜை திட்டம் நடைபெறும் கோயில்களில் பணியாற்றி வரும் 604 அா்ச்சகா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள் என மொத்தம் 743 பேருக்கு கரோனா கால நிவாரண உதவித் தொகையாக ரூ. 4,000, 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருள்கள் ஆகியவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
அதனடிப்படையில், திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள், இதர பணியாளா்கள் என 15 பேருக்கு நிவாரண உதவித் தொகை ரூ. 4,000, 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் பெ.பிரேமலதா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கே.செ.மங்கையா்கரசி, உதவி ஆணையா் மொ.அன்னகொடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


