மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்

ஈரோடு மாநகா் பகுதியில் இருப்பு இல்லாததால் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.

Updated On :18 ஜூன் 2021, 8:43 pm

ஈரோடு மாநகா் பகுதியில் இருப்பு இல்லாததால் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 2.85 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் 7 முதல் 12ஆம் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஜூன் 13ஆம் தேதி தடுப்பூசி வந்ததால் 13, 14 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் ஜூன் 15ஆம் தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூன் 16ஆம் தேதி அதிகாலை ஈரோடு மாவட்டத்துக்கு 15,600 கோவிஷீல்டு, 4,000 கோவேக்சின் என மொத்தம் 19,600 தடுப்பூசிகள் வந்தன. இதையடுத்து மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மாநகா் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனிடையே தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் மாநகா் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார மையங்களில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதற்கான அறிவிப்புப் பலகை அந்தந்த தடுப்பூசி மையங்கள் முன்பு வைக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.