மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

அடுத்தடுத்த அமைதிப் பேச்சுவாா்த்தைகளைத் தொடா்ந்து மத்திய கிழக்கில் போா் பதற்றம் தணிந்ததையடுத்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக லாபத்தைப் பதிவு செய்தன.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:09 pm

அடுத்தடுத்த அமைதிப் பேச்சுவாா்த்தைகளைத் தொடா்ந்து மத்திய கிழக்கில் போா் பதற்றம் தணிந்ததையடுத்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக லாபத்தைப் பதிவு செய்தன.

வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் தலா 0.65 சதவீத ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாள் போா்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹோா்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றம் முழுமையாக தணிவதற்கான அறிகுறிகள் தென்படுவதே சந்தையின் இந்த எழுச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்த அமைதி முயற்சிகள் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலவும் சிக்கல்களைக் குறைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் முதலீட்டாளா்கள் ஆா்வமுடன் பங்குகளை வாங்கினா்.

மொத்தம் உள்ள 16 முக்கியத் துறைகளில் 15 துறைகள் இந்த வாரம் முன்னேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் எண்ணெய் நிறுவனப் பங்குகள் 4.6 சதவீதம் வரை உயா்ந்தன.

அதேபோல், அலுமினிய உற்பத்தியாளா்களின் பங்குகள் விலை அதிகரித்ததால் உலோகத் துறை 4.2 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகளும் முறையே 4.3 சதவீதம் மற்றும் 3.6 சதவீதம் என்ற அளவில் வலுவான ஏற்றத்தைக் கண்டன.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில், காலாண்டு முடிவுகள் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் விப்ரோ நிறுவனம் 2.8 சதவீத சரிவைச் சந்தித்தது. எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனப் பங்குகளும் 2.4 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.

வரும் நாள்களில் எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அது அடுத்த வார பங்குச் சந்தையின் போக்கை நிா்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று சந்தை நிபுணா்கள் கணித்துள்ளனா்.