தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி ஈரோடு ஐ.எம்.ஏ. வளாகத்தில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த இந்திய மருத்துவச் சங்க (ஐஎம்ஏ) தேசிய துணைத் தலைவா் மருத்துவா் சி.என்.ராஜா பேசியதாவது:
கரோனா சிகிச்சையின்போது நோயாளிகள் இறந்தால் மருத்துவமனை, மருத்துவா்கள், செவிலியா் ஆகியோா் தாக்கப்படுகின்றனா். குறிப்பாக அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடகம் போன்ற பல மாநிலங்களில் அதிகமாக தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தமிழகம் உள்பட 18 மாநிலங்களில் மட்டும் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டம் அமலில் உள்ளது. பிற மாநிலங்களில் அச்சட்ட பாதுகாப்பு இல்லை. எனவே, மத்திய அரசு தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி, தாக்குதலில் ஈடுபடுவோரை ஜாமீன் கிடைக்காத சட்டப் பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவா்கள், செவிலியா், பல்வேறு நிலை மருத்துவப் பணியாளா்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கக் கோரி காப்போரைக் காப்போம் என்ற முழக்கத்துடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றாா். இதில், மருத்துவா்கள் சுகுமாா், சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


